காதல் தேன்கூடு > வெண்பா அணி.
உகர உயிர்மெய் எழுத்தொடு நுகரஓர்... உயிரெழுத்து; பகரப் படுவது(ம்) உயிர்மெய் எழுத்தே! அவ்விடமே... நிகழஉறவு நம்பிள்ளைக்கு முதல்எழுத்... தாய் நிலைப்பதும், புகழப்படுவதும்; நின்பெயரே... என்று; புன்னகைத்து நாணும்... அன்னைப்போல், செம்மொழியால் யார்... கவிஞர் ஆனாலும்... விம்ம நெஞ்சம்முன் மொழிவதெது? விண்வரு டும்தாய் தமிழே! பின்னிரவில் கண்விழித்துப் பேணி சுறு சுறுப்பை (மணி) பன்னி... ரெண்டும் தாண்டி பகல்மூன்றில் ஓயும்நம்... பெண்ணேபோல் விண்ணில்,பிறைநிலவும் தேய்கிற(து)ஏன்? என்போல் தமிழ்சுவைக்கும் ஏக்கம்! அழகாய் சிரிக்கும் அனைத்தும் உறங்க, விழியேன் என்றே விடியல் குளிராய், இளமை அணையேன்; எழேன்நான் தமிழாய், விழிவழி பேசு விழிப்பேன்! உலாவும் உலகும் உருளும் கதிரோன், நிலாவும் உறையும் நெழிமுகில் வானும், துளாவி மயங்கும் சுவைஎஃதாம்? வாழை, பழமாவும் பாடும் தமிழே! மலரும் கொடியும் மணமும் முயங்க, நிலவும் ஒளிர நிலமும் குளிர, களத்துள் ம...