காதல் வழி சாதி ஒழி!
வெல்லும்உன் தமிழொடு ! விண்ணோடு என்னோடு ! துள்ளும் சாதிகளை , காதல் சொல்லுள் நொறுக்கிடு ; முள்உள் பேதம்தாண்டு ; முத்தம் வலுக்கொண்டு ! சொல்நாம் ஒன்றுஎன்று மதமோதல் வென்று! கலக்கம்விடு ; இந்தக் காவிரி உனக்காக வருவாள்என் உலகமே ! இப் பெண்ணோடு நீ ஒன்று ; ஒற்றுமை நிலவுப் பிறைநுதல் தொடுஅழகு நேர்வகிடு கலையஎன் இளமை நுகர்ந்து ; சாதி அநீதி விதிஅழி. நோயி'டையே சிற்பி கோயில் நுழைவாயுள் கருவறையுள் ; ஆயுளில் இறுதிநாள் வரைஅழகு தெரித்திட செதுக்கிட்ட தேயாகல் பதுமைகள் மறைந்துற்ற உன்நாகர் மூதாதையர் தாயும் சேயும் தகப்பனும் அவர்களின் பெண்ணேநான் ஆக - ஆயாநம் முன்னோடி வாரிசுகள் உருவ படிவங்கள்தான் ! ஓயாதுஉன் முன்னோரை தேவதை தெய்வம்என கல்ஆ - லயங்களுள் ஆரியன் ஓதும் நடனபதுமை ஓவியங்களை நீயேசெய் பூசை வந்தேறி ஆகமவிதி சட்டம் இல்லையே ! எப்போது வானம் கதவு திறந்தது? நிலவுஎந்த இருட்டுஉள்... தப்பாது... ஒளித்தேனை சிந்தாது! இளமை மறைந்தது? அப்போது இரவு...எதனால் ஞாலம் நம்முன் மிரண்டது? இப்போது என்முன்னே கனவோ...