வரலாறு > திருக்குறல் ஒரு பௌத்த நூல்.
Suresh Bhim என்பவரது பதிவு Suresh Bhim 14ம.நே · திரிக்குறல் ஒரு பௌத்த நூல். கந்தப்பன் வீட்டில் பல்லாண்டு காலமாக பாதுகாக்கப்பட்ட திரிக்குறளும் நாலடியார் ஓலைச் சுவடுகளும் ஆரிங்டன் பிரபு மூலமாக எல்வீஸ் பிரபுவிடம் கொடுக்கப்பட்டு பின்னர் நூல் வடிவில் வந்ததாக வரலாறு சொல்கிறது. ஆக ஓலைச்சுவடியாக இருந்த திரிக்குறள் நூல் வடிவில் மறுபிறவி எடுத்த பெருமையும் திரிக்குறள் திருக்குறளாக மாறியதாகவும் அறியமுடிகிறது. திரிக்குறள்” என்ற சொல்லானது 1892ம் ஆண்டில் அயோத்திதாசர் பண்டிதரால் எழுதப்பட்ட நூதன சாதிகளின் ஹ்பவ பீடிகை, 1909ல் எழுதப்பட்ட திருவள்ளுவர் நாயனார் சரித்திரம், 1907ல் வெளிவந்த தமிழன் வார ஏடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1831ம் ஆண்டு வித்வான் தாண்டவராய முதலியார், வித்துவான் முத்துச்சாமிப் பிள்ளை ஆகியோர் மூலமாக அச்சிட்டு வெளிவந்த திரிக்குறள் நூல் மக்கள் மத்தியிலே பவனிவந்தது. 1835ல் விசாகப் பெருமாள் ஐயர் அச்சிட்ட திருக்குறள் வரலாற்றிலும் 1837ல் விசாகப் பெருமாளின் குறளில் சரவணப் பெருமாள் ஐயர் அச்சிட்ட நூல்களிலும் திருவள்ளுவர் பிராமணர் வகுப்பைச் சார்ந்தவர் எனும் பொய் வாதங்களை அயோத்திதாசர...